உங்கள் ஆரோக்கியம் நாட்டின் ஆரோக்கியம்

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை வரும் முன் காப்போம் என்பது எப்போதும் பாதுகாப்பானது. அதை கடைப்பிடிப்பதும் எளிதானது. கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் பலனில்லை. குறிப்பாக நோய் வந்த பிறகு சிகிச்சை செய்தாலும் அவை முழுமையான பலனை அளிக்காது. மாறாக வலியும் வேதனையும் அதிகரிக்கும். இத்தகைய நிலையும் மன அழுத்தமும் இன்றி இயல்பாக எதிர்கொள்ள ஆரோக்கியம் குறித்து முன் கூட்டியே விழிப்புணர்வு தேவை.

மக்களின் வாழ்க்கைத்தரம் மட்டும் மகிழ்ச்சியைக் கொடுத்துவிடாது. நல்ல ஆரோக்கியம் நிறைந்த மக்களால்தான் அவர்கள் ஈடுபடும் துறைகளிலும் ஆரோக்கியமாக ஈடுபட முடியும். ஆரோக்கியமான மனிதனால் குடும்பமும் அவன் சார்ந்த சமூகமும் ஆரோக்கியமாக இருக்கும். அதே நேரம் தனிமனிதனின் ஆரோக்கியம் என்பது தனி மனிதனையோ அவர்கள் சார்ந்த குடும்பத்தையோ மட்டும் குறிப்பது அல்ல. ஒவ்வொரு மாநிலத்தின் நாட்டின் ஆரோக்கியத்தையும் சேர்த்து குறிப்பது.

ஒவ்வொரு மாநிலமும் மக்களின் ஆரோக்கியத்துக்காக அதிக அளவு செலவு செய்துவருகிறது. நோயைத் தடுப்பதும் மக்களின் ஆரோக்கியத்துக்காக செலவழிப்பதும் அதிகரித்துவருகிறது. மாநிலங்கள் செய்யும் சுகாதார செலவுகளில் 9.6 % தொகை மட்டுமே நோய் தடுப்புக்காக செலவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மருத்துவ பரிசோதனை நாள் (National health Check up) முன்னிட்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துசெல்லும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. இது தனிமனித ஆரோக்கியம் மட்டுமல்லாமல் நாட்டின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.


Popular posts
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட டில்லி வாலிபர் உட்பட 4 பேர்
பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரத்தில் தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்கள் அரசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
கொரோனா நோயாளிகளை தவறுதலாக அனுப்பி வைத்த மருத்துவமனை
Image
அதிரையில் 16ஆம் நாள் தொடர் போராட்டம் – தமீமுன் அன்சாரி MLA பங்கேற்பு
தில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 26 பேரில், டில்லி வாலிபர் உட்பட 4 பேருக்கு கொரோனா உள்ளது தெரியவந்தது