CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம்

CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராகவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அதிரையில் ஷாஹீன் பாக் பாணியில் இன்று 16வது நாளாக தொடர் போராட்டம் அதிரை ஜாவியா ரோட்டில் நடைபெற்று வருகிறது.


இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தி வருகின்றனர்.


இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும், அனைத்து சமுதாய மக்களின் நல்வாழ்வுக்காகவும், கொரோனா வைரஸ் போன்ற கொடூர நோய்களிலிருந்து பாதுகாப்பு வேண்டியும் இன்று ஆண்கள், பெண்கள் என பலர் நஃபிலான நோன்பு நோற்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.


பின்னர் மாலை போராட்ட அரங்கிலேயே இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதேபோல் அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளியிலும் நஃபிலான நோன்பு நோற்றவர்களுக்கான இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது


Popular posts
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட டில்லி வாலிபர் உட்பட 4 பேர்
பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரத்தில் தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்கள் அரசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்
கொரோனா நோயாளிகளை தவறுதலாக அனுப்பி வைத்த மருத்துவமனை
Image
அதிரையில் 16ஆம் நாள் தொடர் போராட்டம் – தமீமுன் அன்சாரி MLA பங்கேற்பு
தில் வீட்டிற்கு அனுப்பப்பட்ட 26 பேரில், டில்லி வாலிபர் உட்பட 4 பேருக்கு கொரோனா உள்ளது தெரியவந்தது